ஒட்ட நறுக்கப்பட்ட வாலை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு நாளைக்கே காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பவிருக்கும் நம்மூர் பெருசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
.....
Third Vision
ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது!
தொடர்பு கொள்ள :
************************************************
மலர்ந்தது தாமரை....! [#431]
Posted by மாயவரத்தான்... *** on Sunday, May 25, 2008ஒட்ட நறுக்கப்பட்ட வாலை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு நாளைக்கே காவிரி, ஒகேனக்கல் பிரச்னையை கிளப்பவிருக்கும் நம்மூர் பெருசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
விவகாரம்னா என்ன? [#430]
Posted by மாயவரத்தான்... *** on Tuesday, May 20, 2008ப்ளாஷ் பேக்.. (1)
"சார்.. பத்திரிகை ஊழியர்கள் எரித்துக் கொன்ற சம்பவத்தில் உங்கள்
மகனுக்கும் சம்பந்தமிருக்கிறதாக சொல்றாங்களே"
"டேய்.. நீ தான்டா கொலைகாரன். நான் சொல்றேன்.. நீ தான்கொலை பண்ணின"
***ப்ளாஷ் பேக்.. (2)
"என்னய்யா இப்படி கோபப் படுறாரு"
"ஆமாம்.. அவர போய் இப்படி கேட்கலாமா?"****
நிகழ் காலம்..
எதை எல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்று
சொல்லுறாங்களோ, அங்கே எல்லாம்விவகாரமிருக்குன்னு அர்த்தம்.
- நிகழ் கால கருத்து நன்றி : வலைப்பதிவர் : TBCD
Categories : அரசியல், சமூகம், வலைப்பதிவர் | 2 comments »
மொட்டைத் தலை & முழங்கால் [#429]
Posted by மாயவரத்தான்... *** on Monday, May 19, 2008நீண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பிரகு வலைப்பூக்கள் பக்கம் வந்ததினால் ஒரு சிலரின் பழைய பதிவுகளை மேய்ந்தேன்.
ஒருவருடைய பதிவில் சிவாஜி விழாவில் ஷ்ரேயா மற்றும் தசாவதாரம் விழாவில் மல்லிகா ஷெராவத் ஆகியோர் உடையணிந்து வந்தது குறித்த பிரச்னை குறித்து எழுதியிருந்தார்.
அவர்கள் அப்படி உடையணிந்து வந்ததை எதிர்ப்பவர்களை 'கலாச்சார காவலர்கள்' என்று அடைமொழி இட்டிருந்தார்.
நம்ம கோயில்களில் இல்லாத கவர்ச்சி காட்சிகளா? அந்த சிற்பங்களை அழித்து விட்டு அப்புறமா இந்த மேட்டருக்கு வாங்க. நம்ம வீட்டுல டி.வி.யில வராத காட்சிகளா? அதை பாக்காம இருந்திட்டு அப்புறமா இதுக்கு வாங்க அப்படீன்னு எல்லாம் வீராவேசமா எழுதியிருந்தார்.
சபாஷ்..
சூப்பருப்பு..
So.. ஷ்ரேயாவும், மல்லிகா ஷெராவத்தும் அப்படி உடையணிந்து வந்தது தப்பில்லைன்னு சொல்றீங்க? அப்படித்தானே? அதை கண்டிப்பவர்கள் எல்லாம் கலாச்சார காவலர்கள்...அப்படித்தானே.. ம்.. இன்டரெஸ்டிங்..
ஒரே ஒரு கேள்வி.. அதே மாதிரி உடையை உங்கள் வீட்டுப் பெண்கள் அணிந்து கொண்டு வெளியில் கிளம்புகிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.. அட, கோயில் சிற்பத்தில இல்லாததா இது அப்படீன்னு கம்முன்னு இருந்துடுவீங்களா? மனசாட்சியிடம் கேட்டு பதில் சொல்லுங்கப்பூ.
கோயிலில் இருப்பதும் நேரில் அப்படியே வருவதும் ஒன்றா?
கோயிலுக்கு அனைவருமே பக்திப் பெருக்குடன் தான் செல்வார்கள். இப்படி வேறொரு கண்ணோட்டத்துடன் செல்கிறவர்கள் தான் மனநோயாளிகள்.
டி.வி.யில அரைகுறையா ஆடை அணிந்து யாரும் வந்தா வேணும்னா பார்க்கலாம், இல்லைன்னா இருக்கவே இருக்கு அடுத்த சானல். ஆனால் பலரும் வரக்கூடிய ஒரு விழாவுக்கு வருகிறவர்கள் இப்படி அரைகுறையாக ஆடை அணிந்து வருவது தப்புன்னு சொன்னா உடனே அதை எப்படி சொல்லலாம்ன்னு கேட்பதா?!
Categories : கலாசாரம், சமூகம், சினிமா | 3 comments »
ஆரம்பிச்சிட்டாங்கய்யா அடுத்த பிரச்னையை..! [#428]
Posted by மாயவரத்தான்... *** on Monday, May 19, 2008நாட்டுலே அவனவனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்னைகள்.
இதிலே சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கிறானாம் ஆண்டி அப்படீங்கிற கதையா இப்போ ஒரு பிரச்னையை கிளப்பி விட்டுருக்காங்க.
சிதம்பரம் கோயில் சைவமா, வைணவமா?
சிதம்பரம் நடராஜர் கோயில் சைவக் கோயிலா, வைணவக் கோயிலா அப்படீன்னு ஒரு முன்னாள் அமைச்சருக்கு (யாருப்பா அந்த அதி புத்திசாலி?!) திடீர்னு சந்தேகம் வந்திடுச்சாம்.
அதுக்கு தீட்சிதர் வெங்கடேசன் (முன்னாள் எம்.எல்.ஏ. தானே?!) பதில் சொல்லிருக்காரு..
('ஜாக்கிசான்' வந்திட்டு போனாலும் போனாரு.. 'அந்தப்' படத்தை வெச்சு இன்னும் என்ன என்ன பிரச்னை எல்லாம் வருமோன்னு தெரில.)'பூலோக கைலாயம்' என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர்
ஆலயம் கண்டிப்பாக ஒரு சைவக் கோயில் தான்.
இங்கு நடராஜர் தான் பிரதானம். அவருக்கு தான் உற்சவங்கள்
தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பன்னிரு
திருமறைகளாலும் பாடல் பெற்ற திருத்தலம் இது.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்குள்ள பெருமாளுக்கு
தீட்சிதர்கள் தான் பூஜை புனஸ்காரங்களை (புனஸ்காரம்னா என்ன?)
செய்து வந்தனர்.
அதன் காரணமாகவே பெருமாளின் பெயர்களை எங்கள் குடும்பக்
குழந்தைகளுக்கு சூட்டி வருகிறோம்.*****
ஹூம்.. அது சைவக் கோயிலா இருந்தா என்ன, வைணவக் கோயிலா இருந்தா என்ன? 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு' அப்படீன்னு பெரியவங்க சொன்னதையெல்லாம் எவன் காதில வாங்குறான்றேன்?!
Categories : ஆன்மீகம், பிரச்னை | 0 comments »
கோயிலுக்கு தூங்கப் போயிருப்பாரோ? [#427]
Posted by மாயவரத்தான்... *** on Monday, May 19, 2008
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் உமா பாரதி பூரி ஜெகந்நாதர் ஆலயத்திற்கு சென்றாராம். போகும் போது கையோடு தலையணையையும் எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
பாதுகாவலர்கள் புடை சூழ வந்தவரை 'அப்படியே திரும்ப ஓடிப்போயிடுங்க' என்று விரட்டி விட்டார்களாம்..
'என்னோட கூட வந்த பாதுகாவலருக்கு கோயிலுக்குள்ளே தலையணை எடுத்து வரக்கூடாதுன்னு தெரியாது' என்று உமா பாரதி சொல்லியிருக்கிறார்.
அடப்பாவிகளா...!
Categories : அரசியல், பா.ஜ.க. | 0 comments »
2011-க்கான அடுத்த முதல்வர் ரெடி! [#426]
Posted by மாயவரத்தான்... *** on Sunday, May 18, 2008வேற யாரு..? நம்ம இளைய திலகம் பிரபு தான்.
அரசியல்ல குதிக்கணும் (ஒடஞ்சிடப்போகுது சார்)- அப்படின்னு சொல்லிருக்காரு பிரபு. (அடைப்புக்குறிக்குள் நீல நிறத்தில் நம்மோட கமெண்ட்)
என்று எனக்கு ரொம்ப நாளாவே ஆசை. அதுக்கான நேரம் தான்
இன்னும் வரலை (சூப்பர் ஸ்டார் எப்போ அரசியலுக்கு
வருவாருன்னு காத்துக்கிட்டு இருக்காரோ?)
என்னை கேட்டா முதலமைச்சரா ஆகுறதுக்கான அனைத்து தகுதிகளும் அண்ணன் பிரபு அவர்களுக்கு தான் இருக்கு. ஏன்னா அண்ணனுக்கு தன் சொந்தக்காரங்க ரொம்ப ஜாஸ்தி. அதனால மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், அடுத்த வாரிசுன்னு வரிசையா அள்ளி விட்டுடலாம். .
Categories : அரசியல், சினிமா | 1 comments »
ரொம்ப முக்கியமான நியூஸ்... [#425]
Posted by மாயவரத்தான்... *** on Sunday, May 18, 2008மு.கருணாநிதியின் குடும்பத்திலிருந்து கலைச்சேவையற்ற அடுத்த நபர் ரெடி.
ஏற்கனவே எம்.ஜி.ஆர். திரைத்துறையிலும் புகழ் உச்சியில் இருந்த போது அவரது செல்வாக்கை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு மாபெரும் காமெடி காட்சியை அரங்கேற்றினர் கருணாநிதி.
ஆனால் அந்தோ பரிதாபம், எம்.ஜி.ஆரிடம் அந்த மேட்டரிலும் கடும் தோல்வியை சந்தித்தார் அவர். .... ஆனால் அதில் பலி ஆடாகப் போனது அவரது மகன் மு.க. முத்து.
இப்போது மு.க. முத்துவின் மகன் அறிவுநிதி ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு படத்தில் பாடல் பாடி இருக்கிறார். ..
வாழ்த்துவோம்.
Categories : எம்.ஜி.ஆர்., கருணாநிதி | 0 comments »
ப்ளாஷ் பேக்.. 20-20 கிரிக்கெட்... [#424]
Posted by மாயவரத்தான்... *** on Saturday, May 17, 2008Categories : கிரிக்கெட் | 0 comments »
ஆஸ்கர் ப்லிம்ஸ் [#423]
Posted by மாயவரத்தான்... *** on Saturday, May 17, 2008ஆஸ்கர் ப்லிம்ஸ் ரவிச்சந்திரன் தங்களது நிறுவனத்தின் பெயரையும் லோகோவையும் அனுமதியின்றி பயன் படுத்தி வருவதால் அவர் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக (அமெரிக்க) ஆஸ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
ஏன்டா ஜாக்கிசானை கூப்புட்டோம்னு ரவிச்சந்திரன் புலம்பிட்டுருப்பரோ?!
Categories : ஆஸ்கர் பிலிம்ஸ், ஜாக்கி சான் | 1 comments »
தமிழில் தட்டச்ச... [#422]
Posted by மாயவரத்தான்... *** on Saturday, May 17, 2008இன்னைக்கு தான் கவனிச்சேன்...
http://www.google.com/transliterate/indic/Tamil#
இங்கே போயிட்டு அப்புறமா blogger பக்கம் வந்து தட்டச்சினாலும் சூப்பரா தமிழ்லேயே வருது.
கூகுளாண்டவர் எங்கேயோ போயிட்டுருக்காரு!!!
Categories : கூகுள், தமிழ் | 2 comments »


