Thursday, November 05, 2009

நினைவலைகள்.#1..(மயிலாடுதுறை) [#508]

ஒரு பிரலப பத்திரிகை குழுமத்தில் (கல்லூரி படிக்கும் போதே) நிருபராக பணியாற்றிய காலம்.

மயிலாடுதுறையில் நண்பர் ஒருவரோடு மணிக்கூண்டு அருகில் உள்ள காளியாக்குடி ஹோட்டலில் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது பலரும் வெளியில் ஓடிப் போய் எட்டிப் பார்த்தனர். நானும் என்னவோ என்று எழுந்து போய்ப் பார்த்தேன்.

ஹோட்டலுக்கு சற்றுத் தள்ளி எதிர் வரிசையில் ஒரு டிராக்டரும் அதன் கீழே அப்படியே கவிழ்ந்து படுத்தாற் போல ஒரு மாணவியும்!

சரி, டிராக்டரில் மோதி அந்த (பள்ளிக்கூட) மாணவி கீழே விழுந்துவிட்டார் போலருக்கிறது என்று நினைத்து நானும் நண்பரும் அவரைத் தூக்கி விட ஓடினோம். கிட்ட நெருங்கும் போது தான் அதிர்ந்து போனோம். மடக்கிப் போட்டாற்போல தலை மண் பக்கம் திரும்பி படுத்திருந்த அந்த மாணவியின் முகத்திலிருந்து மண்ணில் சிவப்பு திரவம் பலமாக பரவத் தொடங்கியது. "ஐயோ ரத்தம்" என்று கத்தினான் நண்பன்.

ஓரிரு நிமிடங்களில் அந்த மாணவியின் தலைப் பிரதேசம் முழுக்க சுற்றிலும் ரத்தம் தேங்கி நின்றது.

கூப்பிடு தொலைவில் நின்றிருந்த இரண்டு டிராபிக் போலீஸாரை போய் கூப்பிட்டு வந்தோம். டிராக்டரை ஓட்டி வந்திருந்தவனும், கூடவே உட்கார்ந்து வந்திருந்த ஒரு நான்கைந்து பேரும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.
"சார், அவனுங்க ஓடுறானுங்க" என்று போலீஸாரிடம் சொன்ன போது "எங்க சார் போயிடப் போறானுங்க?" என்று பதில் வந்தது 'ஸ்காட்லாந்து யார்டு'க்கு tough fight கொடுக்கும் தமிழக காவலர்களிடமிருந்து பொறுப்பாக..

"அந்தப் பொண்ணுக்கு என்ன ஆயிடிச்சின்னு பாருங்க" என்று சொன்னதற்கும் "அதான் இவ்வளவு ரத்தம் வந்திருக்கே. அவ்ளோ தான்" என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப் நோக்கி இரண்டு காவலர்களும் நடந்து போனார்கள் - போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க!

ஏரியா முழுக்க எக்கச்சக்க கூட்டம் கூடியது. கூடவே அந்த மாணவியின் தலையைச் சுற்றிலும் எக்கச்சக்க ஈக்கள் மொய்க்கத் தொடங்கியிருந்தன.

குப்புற படுத்த நிலையில் இருந்ததால் அந்தப் பெண் யாராக இருக்கும் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை. (யூனிபார்மை வைத்து)செய்தி அந்த மாணவி படித்த பள்ளிக் கூடத்திற்கும் சென்று அங்கிருந்து பல மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். வந்து பார்த்த மாத்திரத்திலேயே அந்தப் பெண் யாரென்று அவர்களுக்கு தெரிந்து போயிற்று. கதறல் ஒலிகள் அதிகமாயின.

போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே, அங்கே நடு ரோட்டில் நின்றிருந்த டிராக்டரை அப்புறப்படுத்த வேண்டிய நிர்பந்தம். இரண்டு காவலர்களும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. "ஸ்டேஷனிலிருந்து ஆள் வரணுமப்பா" என்று சொன்னார்கள். "அப்போ நீங்க ரெண்டு பேரும் எங்க இருந்து வந்தீங்க?" என்று யாருக்கும் கேட்கத் தோன்றவில்லை - என்னையும் சேர்த்து! கூட்டத்தில் இருந்த நாங்கள் சிலர் சேர்ந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த ஆரம்பித்தோம்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அரை மணி நேரம் கழித்து கும்பலாக நான்கைந்து போலீஸார் வந்தனர். வரும் போதே "போயிடுச்சா?" என்று கேட்டுக் கொண்டே தான் வந்தார்கள். கோடு போட்டார்கள். டிராக்டரை அருகிலிருந்த ஸ்டுடியோவிலிருந்து ஆளை வரச் சொல்லி படமெடுக்க வேண்டும் என்றார்கள். அதற்கும் அரை மணி நேரத்துக்கும் முன்பு வரை திறந்திருந்த அந்த ஸ்டுடியோ அப்போது மூடி இருந்தது. பிறகு விசாரித்ததில் இப்படி எடுக்கப்படும் போட்டோக்களுக்கு போலீஸிலிருந்து காசு பெயராது என்பதினால் அந்த ஸ்டுடியோக்காரர் எஸ்கேப் என்று கேள்விப்பட்டேன்.

கேமராவும் கையுமாக அலைந்து கொண்டிருந்தபடியால் ஒரு சில புகைப்படங்களை எடுத்தேன். "அந்த போட்டோக்களை கொஞ்சம் தர முடியுமா?" என்று வேறு போலீஸார் கேட்டார்கள்.

அடுத்த நாள் சம்பந்தப் பட்ட பள்ளிக் கூடத்திற்கு சென்ற போது அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையை சந்திக்க முடியவில்லை. அவர் விடுப்பில் சென்று விட்டார் என்றார்கள்.

பள்ளிகூடங்கள், அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், பிரபல நிறுவனங்கள் என்று எப்போதும் ஜெக ஜோதியாக காட்சியளிக்கும் அந்த பட்டமங்கலத் தெருவில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். சாலையின் இரு பக்கமும் எக்கச்சக்கமாக மண் வேறு தேங்கி இருக்கும். ஒரு பஸ் அல்லது லாரி வந்தால் போதும்.. எதிரில் வருபவர்கள் மணலில் தான் போய் ஒதுங்க வேண்டும்.

இது குறித்து இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு பல மாதங்களுக்கு முன்னரே கூட நான் ஒரு சிறிய கட்டுரை எழுதி அது பத்திரிகையில் வெளியாகியிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருந்தும் எதுவுமே நிகழவில்லை. இந்த மாணவி இறந்தது கூட டிராக்டருக்காக ஒதுங்க... மணலில் சைக்கிள் சிக்கி கீழே விழுந்து, டிராக்டர் மேலே ஏறியதால் தான்!

மறுநாள் பள்ளிக்கூடத்தில் சென்று விசாரித்த போதும் கூட அவர்கள் இதைத்தான் குறையாகச் சொன்னார்கள்.

மீண்டும் இது குறித்து ஒரு கட்டுரை எழுதி அதுவும் பிரசுரமாகியது.

அந்த இதழ் கடைகளில் கிடைத்த தினத்தன்று இரவு சுமார் பத்தரை இருக்கும். என்னைத் தேடி ஒரு பத்து, பனிரெண்டு பேர் வந்திருந்தார்கள். "நாங்க எல்லாம் அந்த ஸ்கூலுக்கு சம்பந்தப்பட்டவர்கள். ஒரு சிலர் அங்கே பணி புரிகிறோம். மற்றவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருக்கிறோம். எல்லாம் எழுதினீங்க, ஆனா ஸ்கூல் பசங்க கிட்ட இருந்து இன்ஸூரன்ஸ் தொகை வசூல் பண்ணினாங்க. அதை இவ்வளவு நாளா கட்டாமலேயே வெச்சிட்டு நேத்தைக்கு அந்த பொண்ணு செத்துப் போனப்புறம் அவசர அவசரமா போய் கட்டியிருக்காங்க. அந்தப் பொண்ணு குடும்பத்துக்கு இன்ஸூரன்ஸ் தொகையாவது கெடைச்சிருக்கும்" என்று புகார் சொன்னார்கள்.

மறுநாள் மறுபடியும் ஸ்கூல் சென்றால், அன்றைக்கும் தலைமை ஆசிரியையை சந்திக்க முடியவில்லை. டெலிபோன் நம்பர் வாங்கி தொடர்பு கொண்டு பேசியதில், "அப்படியெல்லாம் இல்லை" என்று சொல்லி பேச்சைத் துண்டித்தார்.

மீண்டும் பாலோ-அப் எழுதி வெளியாகியது.

இன்ஸூரன்ஸ் தொகையை குறிப்பிட்ட சமயத்தில் கட்டாமல் வைத்திருந்தது தவறாகத் தெரியவில்லை சம்பந்தப்பட்டவர்களுக்கு. இதை எழுதியதற்காக எனக்கு பல பேருக்கு எதிராக 'லட்சார்ச்சணை' நடந்தது தனிக்கதை.

***

இது ஆயிற்று கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேல்!

சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன்.

அதே பட்டமங்கலத் தெரு..

அதை விட மோசமான டிராபிக்..

அதே போல சாலையின் இரண்டு பக்கமும் மணல் குவிந்து கிடக்கிறது.

ஒரே வித்தியாசம்.. சைக்கிளுக்கு பதிலாக மோட்டார் சைக்கிள்களில் பெண்கள் டிராக்டருக்கும், லாரிக்கும் பயந்து மணலில் வண்டியை ஓட்டுகிறார்கள்.





Friday, September 25, 2009

திடீர் பதிவர் சந்திப்பு - தாய்லாந்து 'போண்டா' மீட்டிங் [#507]





ஸாரி.. போண்டா கிடைக்காததால் பரோட்டா சாப்பிட்டு மீட்டிங் முடித்தோம். படத்தில் இருப்பது கானா பிரபாவும் அவருடைய தாய்லாந்து நண்பரும்

Wednesday, September 23, 2009

லஞ்சம்.. [#506]

உலகத்தில் லஞ்சம் குறைவாக புழங்கும் நாடுகளில் நியூஸிலாந்து முதலிடம் வகிக்கிறதாம். அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் இருக்கிறது.

ஆசியா வீக் இதழ் சமீபத்தில் வெளியிட்ட இந்தப் பட்டியலில் இந்தியா 34-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு 74-ஆவது இடம் இருந்ததாக நினைவு.

நண்பர் ஒருவரிடம் இது குறித்துப் பேசிய போது, 'பாகிஸ்தான் எத்தனாவது இடத்தில இருக்கு?' என்று கேட்டார். 'ஹும். அப்பாடி, அவங்களுக்கு நாம பரவாயில்ல' என்று பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயமா இது? எது எதில் தான் இப்படி கம்பேர் செய்வது என்று விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்குவது என்ற அடிப்படை விஷயங்கள் மறந்து போய், 'சம்பளம் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை, ஆனால் செய்ய வேண்டிய காரியத்திற்கு லஞ்சம் வாங்கியே தீருவோம்' என்று தலை முதல் கால் வரை அனைவருமே விடாப்பிடியாக இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, சமீப காலமாக தனியார் நிறுவங்களில் கூட பல விதங்களில் லஞ்சம் ஊடுறுவியுள்ளது.

நாட்டில் லஞ்சம் பெருகியுள்ளதற்கு காரணம் அரசியல்வாதிகளா அல்லது அரசு அதிகாரிகளா என்று ஒரு கேள்வி பல காலமாக எல்லாரிடமும் பேசப் படுகிறது. 'முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா?' என்பதற்கு அடுத்தபடியாக இது தான் பெரும் குழப்பமான கேள்வி என்று எங்கேயோ படித்த நியாபகம். அடித்துச் சொல்லலாம் - அரசியல்வாதிகள் தான் காரணம். அரசியல்வாதிகள் வோட்டு வாங்க காசு கொடுப்பதில் ஆரம்பிக்கிறார்கள் லஞ்சத்தை. கொடுத்த காசை மீட்டெடுக்க வேன்டாமா? கிடைக்கும் நேரத்தில் அள்ளப் பார்க்கிறார்கள். அவரே எடுக்கிறார் என்றால், நாம் மட்டும் இளிச்சவாயர்களா என்று அவருக்கு கீழ் வரும் அதிகாரிகளும் அப்படியே செய்கிறார்கள். தேனை எடுக்கிறவன் புறங்க் கையை நக்குகிற கதை தான் இது!

'அவனை நிறுத்தச் சொல்லு, நானும் நிறுத்துறேன்' என்ற டயலாக் எல்லாம் சரிப்பட்டு வராது. பெயருக்கு ஒரு சில அரசு அதிகாரிகள் லஞ்சப் புகாரில் சிக்குகிறார்கள். எந்த ஒரு அரசியல்வாதியாவது லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டதாக சரித்திரம் இருக்கிறதா?

கடந்த வாரத்தில் ஒருநாள் மத்திய அரசு இணைய தளம் ஒன்றில் பல துறைகளில் ஊழல் புரிந்த 123 பேரின் பட்டியல் போட்டிருக்கிறார்கள் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடப்பாவிகளா, ஒட்டு மொத்த இந்தியாவிலும் அந்த 123 பேர் மட்டும் தான் சிக்கினார்களா?

அரசியல்வாதி(கள்) திருந்தினாலே போதும், அதிகாரிகளும் திருந்துவார்கள்.

அரசியல்வாதியை யார் திருத்துவது?

Tuesday, September 22, 2009

இணையம் வழி தமிழ் தொலைக்காட்சிகள் [#505]

தமிழ் சேட்டிலைட் சானல்கள் அனைத்துமே இலவசமாக பல இணைய தளங்களில் காணக் கிடைக்கின்றன. அவற்றை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பினால் லாப்-டாப்பிலிருந்து ஆடியோ-விடியோ எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து பார்க்க முடிகிறது. இது தவிர வேறு எதுவும் வழியில் பார்க்க இயலுமா? Dreambox என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். விபரம் தெரிந்த புண்ணியவான்ஸ் அது குறித்து தகவல் தெரிவிக்கவும். நன்றி.

Monday, September 07, 2009

இந்தியாவிற்கு தொலைபேச ஐம்பது பைசா தான்..[#504]

VoipBlaster.com, SmartVoip.com, Jumblo.com ஆகிய தளங்களில் சென்று பாருங்கள், இந்தியாவிற்கு தொலைபேச சுமார் ஐம்பது பைசா தான் ஆகிறது. மேலும் பல நாடுகளுக்கும் கூட இலவசமாகத் தொலைபேசலாம். இது குறித்த எனது பழைய பதிவு ஒன்று...

Wednesday, May 13, 2009

தலைவர் வோட்டு [#503]

தலைவரு யாருக்கு ஓட்டு போட்டிருப்பாரு?!

Friday, April 17, 2009

Election 2009 - எச்சரிக்கை : 1 [#502]

ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முகவை குமாரை (அதாங்க ரித்தீஷ்!) பாராளுமன்ற உறுப்பினராக நிற்க வைத்து மக்களை பெரும் சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறார் மு.க. தேர்தலில் ஜெயிக்கலைன்னா மீண்டும் அண்ணாச்சி நடிக்க வந்திடுவாருல்ல? ஒரு மாநிலத்துக்காக ஒரு தொகுதி பலியாவுறது தப்பில்ல மக்கா.

Thursday, April 16, 2009

Election 2009... [#501]

Very soon..


Monday, December 01, 2008

மும்பை குண்டு வெடிப்பு : மூ.க.தனமான கேள்வி பதில் [#500]

வழக்கமான தானே கேள்வி - தானே பதில் இல்லை. 

அபூர்வமாக நிருபருக்கு அளித்த பேட்டி. 

கேள்வி : மும்பையில் தீவிரவாதிகள் கொடூரம் புரிந்திருக்கிறார்களே? 

பதில் : ஆமாம்  

கேள்வி : யார் இதை செய்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் செய்திருப்பார்கள் என்று சொல்லப்படுகிறாதே? 

பதில் : அப்படீன்னு யாரு சொல்றாங்க?  

கேள்வி : பொதுவான பேச்சு இருக்கிறதே?  

பதில் : நீதான்டா தீவிரவாதி.. நீதான் குண்டு போட்டிருப்பன்னு நான் சொல்றேன்.  

கேள்வி : ஐயோ, என்ன சொல்றீங்க?  

பதில் : ஆமாம்.. நீதான் தீவிரவாதி. உனக்கு அந்த பா***தியும், உலகில் உள்ள அத்தனை பா***ர பத்திரிகைகளும் துணை செஞ்சிருக்கும். இப்போதான் நியாபகத்துக்கு வருது. மதுரை சம்பவத்துக்கு கூட நீங்கதாண்டா காரணம்.


அதற்குள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று எச்சரிக்கை விடப்பட, உடனே :  

பதில் : சும்மா லுலுவாயிக்கு சொன்னேன்.  


பின்குறிப்பு : மூ.க. தனமான என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வது அவரவர் விருப்பம்.

Saturday, November 15, 2008

Player of the Year 2008 [#499]